‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவை’- அக்டோபர் வரையிலான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

"சென்னை, சிங்கப்பூர் இடையே விமான சேவை"- அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஸ்கூட் நிறுவனம்!
Photo: Flyscoot

 

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்திற்கு (Singapore Airlines Group) சொந்தமான ‘ஸ்கூட்’ (Scoot) , தமிழகத்தின் கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது.

மது போதையில் வாகனம் ஓட்டி பிடிபட்ட 12 பேர்

குறிப்பாக, திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே இறுமார்க்கத்திலும் தினசரி இரண்டு நேரடி விமான சேவைகளை வழங்கி வரும் ஸ்கூட், A321neo என்ற ரக விமானத்தைப் பயன்படுத்தி வருகிறது. இந்த வழித்தடத்தில் குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்கி வருவதால், ஸ்கூட் நிறுவனம், பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அந்த வகையில், ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதங்கள் வரையிலான இந்த வழித்தட விமான சேவைக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ரூபாய் 9,901 ஆகவும், திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு ரூபாய் 10,819 ஆகவும் ஆரம்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதலாளி வீட்டில் கைவரிசை காட்டிய வெளிநாட்டு பணிப்பெண்… S$50000 ரொக்கம் நகைகள் திருட்டு

விமான பயண அட்டவணை மற்றும் விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en என்ற ஸ்கூட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.