‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவை’- மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

scoot-flight-diverted
Photo:Facebook/flyscoot

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ‘ஸ்கூட்’ விமான நிறுவனம் (Flyscoot), இந்தியாவின் திருச்சி, கோவை, கொச்சி, கொல்கத்தா, அமிர்தசரஸ், ஹைதராபாத், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், அகமதாபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.

தேக்காவில் திருட்டு… ART கருவிகளைத் திருடியதாக பிடிபட்ட இருவர்!

குறிப்பாக, திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி விமான சேவையை ஸ்கூட் தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த வழித்தடத்தில் அதிக இருக்கைகள் கொண்ட A321neo என்ற விமானத்தை ஸ்கூட் நிறுவனம் இயக்கி வருகிறது.

இந்த நிலையில், திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையேயான விமான பயணச் சேவைக்கான மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விமான சேவை அட்டவணை, பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en/ என்ற ஸ்கூட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் நடவடிக்கையில் தொடர்புடைய 3 ஆடவர்கள் பிடிபட்டனர் – அதன் மதிப்பு S$162,000

தற்போது கோடைக்காலம் என்பதாலும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தேர்வு விடுமுறை என்பதாலும் சிங்கப்பூருக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் கூறுகின்றன.