இந்தியாவின் திருச்சி, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், கோவை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் தொடர்ந்து நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது.
சிராங்கூன் காபி கடையில் தீ… விரைந்த SCDF – ஒருவர் மருத்துவனையில் அனுமதி
குறிப்பாக, திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி நேரடி விமான சேவையை ஸ்கூட் நிறுவனம் வழங்கி வருகிறது. திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு சுமார் 04.30 மணி நேரத்தில் சென்றடைகிறது விமானம்.
இந்த வழித்தடத்தில் A321neo என்ற விமானம் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சி தொழில் நகரம் என்பதால், இங்கிருந்து சிங்கப்பூருக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த விமான சேவை மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. அதேபோல், இந்த விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மே 15- ஆம் தேதி அன்று ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பௌர்ணமி பூஜை!
பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en/ என்ற ஸ்கூட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.