வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல்!

Singapore passengers-trichy-airport

திருச்சி விமான நிலையத்தில் (Trichy International Airport) வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இண்டிகோ விமான என்ஜினில் தீ…. அவசர அவசரமாக பயணிகள் வெளியேற்றம்!

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, துபாயில் இருந்து திருச்சிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் வந்த பயணி ஒருவரிடம் வான் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர், நடத்திய சோதனையில் 526.5 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த மற்றொரு பயணியிடம் இருந்து 517.5 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு 69 லட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய நிலைக்கு மாறும் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் – டாப் ஐந்தில் இந்தியர்கள்

தங்கத்தை கடத்தி வந்த இரண்டு பயணிகளையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் அதிகாரிகள்.