‘திருச்சி, சிங்கப்பூர் இடையே கூடுதல் விமான சேவை’- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அதிரடி!

Photo: Air India Express Official Twitter Page

 

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), திருச்சி, சிங்கப்பூர் இடையே நேரடி மற்றும் தினசரி விமான சேவையை இருமார்க்கத்திலும் தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த நிலையில், இந்த வழித்தடத்தில் வரும் அக்டோபர் 30- ஆம் தேதி முதல் கூடுதல் விமான சேவை (Additional Flight Services) வழங்கப்படும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆடிப்பெருக்கையொட்டி, சிங்கப்பூரில் உள்ள கோயில்களில் தாலிப்பெருக்கு பூஜை!

திருச்சியில் சிங்கப்பூருக்கு IX 690, IX 682 ஆகிய எண்களைக் கொண்ட விமானங்களையும், சிங்கப்பூரில் இருந்து திருச்சி IX 681, IX 689 ஆகிய எண்களைக் கொண்ட விமானங்களையும் இயக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே, தின்சரி ஒரு விமான சேவையை மட்டுமே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வழங்கி வந்த நிலையில், கூடுதல் மேலும் ஒரு விமான சேவையை வழங்கவுள்ளது.

நூதன முறையில் தங்கம் கடத்தல்…. விமான நிலையத்தில் சிக்கிய பயணி!

கூடுதல் விமான சேவைக்கான பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் https://www.airindiaexpress.com/home என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.