‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Air India Express Official Twitter Page

 

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), திருச்சி, சிங்கப்பூர் இடையே தொடர்ந்து தினசரி மற்றும் நேரடி விமான சேவைகளை இரு மார்க்கத்திலும் வழங்கி வருகிறது. இந்த வழித்தடத்திற்கு ஆரம்பக் கட்டணமாக 8,195 ரூபாயாகவும், அதிகபட்சமாக 13,559 ரூபாயாகவும் விமான நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

பாம்புகள், பல்லிகளை கடத்தி வந்த பயணி…. விமான நிலையத்தில் பரபரப்பு!

திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையேயான விமான சேவைக்கான ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விமான பயண அட்டவணை மற்றும் பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.com/home என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையையொட்டி, சிங்கப்பூரில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், தமிழகத்தில் திருச்சி, மதுரை, சென்னை ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு தொடர்ந்து நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.