திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு இயக்கப்படும் விமான சேவைகள், கடந்த ஆண்டு 1,000 சேவைகளை தாண்டி இயக்கப்பட்டதாக திருச்சி விமான நிலைய இயக்குனர் கூறினார்.
கடந்த 2021ஆம் ஆண்டை ஒப்புநோக்கையில், தற்போது பயணிகளின் விகிதம் 90 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
வெளிநாட்டில் கணவருக்கு வேலை… மனைவியின் தகாத காதல் – இதனால் நேர்ந்த கொடூரம்…!
மேலும், கார்கோ என்னும் சரக்கு பிரிவில் இந்த நடப்பு ஆண்டில் சுமார் 46.89 மெட்ரிக் டன் சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு மட்டும், சுமார் 3,084 வெளிநாட்டு விமான சேவைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுநோய் பாதிப்பு குறைந்து வரும் சூழலில், இனிவரும் காலங்களில் விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் திருச்சி விமான நிலைய இயக்குனர் (பொறுப்பு) உன்னிகிருஷ்ணன் கூறினார்.
சிங்கப்பூரில் உங்கள் இந்திய பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது எப்படி? வாங்க தெரிஞ்சிக்கலாம்!