திருச்சி, சிங்கப்பூர் இடையே விமான சேவை- நவம்பர் மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவைத் தொடங்கியது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!

Photo: Air India Express Official Twitter Page

திருச்சி, சிங்கப்பூர் இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் (Air India Express) தொடர்ந்து விமானங்களை இயக்கி வருகிறது. அதேபோல், சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் பண்டிகை காலங்களில் தங்கள் பூர்வீக கிராமத்திற்கு சென்று குடும்பத்தினருடன் கொண்டாட ஏதுவாக சிறப்பு விமானங்களையும் அந்நிறுவனம் இயக்கி வருகிறது.

சிங்கப்பூரில் மேலும் 2,553 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று!

இந்த நிலையில், மாதந்தோறும் சிங்கப்பூர் பயணம் தொடர்பான அட்டவணையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சமூக வலைத்தளங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூர்- சென்னை, சிங்கப்பூர்- கோழிக்கோடு, சிங்கப்பூர்- திருச்சி, கோழிக்கோடு- சிங்கப்பூர், திருச்சி- சிங்கப்பூர் போன்ற வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்படவுள்ளது.

சிங்கப்பூரின் புதிய பயணத்தட திட்டத்தால், வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

எனவே, இவ்வழித்தடங்கள் மூலம் சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டிற்கும் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் முன்பதிவு செய்துக் கொள்ளலாம். நவம்பர் மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ https://www.airindiaexpress.in/en என்ற இணையதளத்தில் விமான பயண டிக்கெட் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.