தீ விபத்தில் இந்திய நாட்டவரை காப்பாற்ற, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் உதவிய 3 பேருக்கு SCDF விருது

(Photo: K Shanmugam Sc/FB page)

யிஷூனில் புளோக் 141இல் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் சமூக பொறுப்புணர்வைக் காட்டிய அண்டை வீட்டாருக்கு, முதலாவதாக உதவியதற்காக “SCDF சமூக விருது” வழங்கப்பட்டுள்ளது.

விருதுகளை பெற்ற 3 பேருக்கு சிங்கப்பூர்க் குடிமை பாதுகாப்பு படை பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

திரு. சோ ஷாவ் லியொங், குமாரி ரங்கநாதன் முத்துலட்சுமி, திரு. பாஸ்கரன் சபரிஷ் ஆகிய அந்த மூவருக்கு சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் விருதை வழங்கி கவுரவித்தார்.

50 வயதான வீட்டுப் பணிப்பெண் முத்துலட்சுமி, எரிந்துகொண்டிருந்த தனது பக்கத்து வீட்டிற்குள் நுழைந்து இந்தியரான வயதான பெண்மணியை பத்திரமாக காப்பாற்றினார்.

அவர்களுக்கு உதவ மேலே குறிப்பிட்ட மற்ற இருவரும் எரியும் வீட்டிற்குள் உள்ளே நுழைந்துள்ளனர்.