தீ பற்றி எரிந்த லாரி (காணொளி) – தொடரும் விசாரணை

Photo: SG Road Vigilante Facebook

உட்லேண்ட்ஸ் அவென்யூ 2க்கு முன் சிலேத்தர் எக்ஸ்பிரஸ்வே வழியாக, மத்திய எக்ஸ்பிரஸ்வே நோக்கி சென்ற லாரியில் தீப்பிடித்தது.

இதுகுறித்து நேற்று (ஜூலை 14) பிற்பகல் 3:05 மணியளவில், சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படைக்கு (SCDF) தகவல் கொடுக்கப்பட்டது.

SG Road Vigilante பேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்த காணொளி ஒன்று வெளியானது. அதில், சாலையின் ஓரத்தில் பற்றி எரியும் லாரியை காணமுடிகிறது.

காணொளி:

இருப்பினும், லாரி சாலை ஓரத்தில் இழுக்கப்படுவதற்கு முன்னர் அல்லது பின்னர் தீ விபத்து ஏற்பட்டதா என்பது தெரியவில்லை.

இந்த சம்பவத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.