துவாஸ் தீ விபத்து: காயமடைந்த ஊழியர்களின் தற்போதைய நிலை என்ன?

Tuas explosion
(Photo: MWC/Facebook)

துவாஸ் தீ விபத்தில் சிக்கி காயமடைந்த 4 ஊழியர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) இருந்து உயர் கவனிப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை அவர்களின் முதலாளியிடமிருந்து பெற்றதாக Migrant Workers’ Centre (MWC) தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் துவாஸ் வெடிப்பில் உயிரிழந்த இந்திய ஊழியர்… நிதி திரட்டும் முயற்சி

MWC குழு ஊழியர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, இந்த கடினமான காலகட்டத்தில் அவர்களுக்கு உதவுவதாக உறுதியளித்தனர்.

காயமடைந்த ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இடையே விரைவில் காணொளி அழைப்புகளை ஏற்பாடு செய்ய மருத்துவமனையுடன் இணைந்து செயல்படுவோம் என்றும் MWC தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் துவாஸ் வெடிப்பில் உயிரிழந்த மற்ற இரு ஊழியர்களின் அடையாளம்..