துவாஸில் உள்ள தொழிற்சாலை கிடங்கில் சுமார் 1½ கால்பந்து மைதான அளவில் தீ விபத்து ஏற்பட்டது.
நேற்று மார்ச் 13 ஆம் தேதி மாலை ஏற்பட்ட தீ, துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்களால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
அதாவது அன்று மாலை 6.15 மணியளவில் 28 Tuas South Avenue 8ல் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) தகவல் செய்யப்பட்டது.
ஆறு மாடி உற்பத்தி பிரிவு உட்பட கிடங்கு மற்றும் தொழில்துறை கட்டிடத்தில் இந்த தீ ஏற்பட்டது.
தீயை கட்டுக்குள் கொண்டுவர மொத்தம் 26 அவசரகால வாகனங்களும் சுமார் 80 வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இரண்டு ஊழியர்களுக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டதாகவும் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மற்ற எந்தவித காயங்களும் பதிவாகவில்லை என்றும் SCDF கூறியுள்ளது.