வெளிநாட்டவர்களின் பலே திட்டம்.. தப்பிச் செல்ல முயன்ற இருவரை விமானத்தில் வைத்து தூக்கிய போலீஸ்

சிங்கப்பூர் விமானத் துறையில் சுமார் 4,300 க்கும் மேற்பட்ட வேலைகள்
Lean Jinghui

சிங்கப்பூர்: பணப் பரிமாற்றம் செய்பவரிடமிருந்து பணத்தை திருடிய இருவர் சாங்கி விமான நிலையத்தில் தப்பிக்க முயன்றதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சாங்கி விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த அந்த இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் 21 அன்று கோல்மன் ஸ்ட்ரீட்டில் பணம் மாற்றுபவர் ஒருவரிடம் இருந்து சுமார் S$100,000 திருடப்பட்டது குறித்து தகவல் கொடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

விதிகளை மீறிய ஊழியர்கள்… அதிரடி சோதனையில் பிடித்த அதிகாரிகள் – S$10000 வரை அபராதம் விதிக்கப்படலாம்!

45 மற்றும் 54 வயதுடைய அந்த இரு சந்தேகநபர்களும் சம்பவத்திற்கு முன்னர் நான்கு தடவைகள் அமெரிக்க டாலர்கள் கொடுத்து சிங்கப்பூர் டாலராக மாற்றியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

விமானத்தில் இருந்த அவர்களை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

ஜெர்மனி செல்ல இருந்த அவர்கள் இருவரும் வெளிநாட்டினர் என்பது கூடுதல் தகவல்.