சட்டவிரோதக் குழுக்களின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் 9 ஆடவர்கள் கைது

police-gang-members-arrested
Police

சிங்கப்பூரில் சட்டவிரோதக் குழுக்களின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் ஒன்பது ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 18 வயதுக்கும் 43 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிராங்கூன் சென்ட்ரலில் இரத்தம் சொட்ட சொட்ட சண்டையிட்டுக் கொண்ட ஆடவர்கள் கைது – (காணொளி)

அவர்களில் 20 வயது ஆடவர், பொது இடத்தில் பயங்கர ஆயுதம் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டார்.

குற்றப் புலனாய்வுத் துறையின்(CID) இரகசியச் சங்கப் பிரிவும் (CID) மற்றும் காவல்துறை நிலப் பிரிவுகளும் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தீவு முழுவதும் கடந்த நவ. 12 மற்றும் 28க்கு இடையில் இரவு கேளிக்கை விடுதிகள், உணவு&பான (F&B) விற்பனை நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்களில் சோதனை நடவடிக்கைகள் நடந்தன.

இந்த நடவடிக்கைகளின் போது, ​​போலீசார் சுமார் 254 பேரிடம் சோதனை நடத்தினர்.

தற்போது அந்த ஒன்பது பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி, மதுரை வந்த இருவருக்கு ஓமைக்ரான் பாதிப்பு இல்லை!