தன் சொந்த மகன்களையே கொலை செய்த தந்தை – ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சிங்கப்பூர் போலீஸ்

greenridge-playground

அப்பர் புக்கிட் திமாவில் விளையாட்டு மைதானத்தில் உயிரிழந்து கிடந்த இரண்டு 11 வயது சகோதரர்களின் தந்தை மீது இன்று திங்கள்கிழமை (ஜனவரி 24) அவரது மகன்களில் ஒருவரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகையின்படி, 48 வயதான சேவியர் யாப் ஜங் ஹவுன் என்பவர், கடந்த ஜனவரி 21 அன்று மாலை 4.23 முதல் 6.25க்கு இடைப்பட்ட நேரத்தில் கிரீன்ரிட்ஜ் கிரசண்ட் விளையாட்டு மைதானத்தில் உள்ள கால்வாயில் யாப் இ செர்ன் ஈத்தன் என்ற மகனை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எந்தெந்த நாடுகளுடன் சிங்கப்பூர் அரசு ‘VTL’ ஒப்பந்தம் செய்துள்ளது?- விரிவான தகவல்!

அந்த சகோதரர்கள் இருவரும் விளையாட்டு மைதானத்தில் அசைவில்லாமல் கிடந்தனர், அதன் பின்னர் அவர்களின் மரணம் உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து அனைத்து சாத்தியமான விசாரணைகளின் அடிப்படையில் யாப் கைது செய்யப்பட்டதாக சனிக்கிழமை இரவு போலீசார் தெரிவித்தனர்.

இன்று திங்கள்கிழமை காலை ஒரே ஒரு குற்றச்சாட்டு மட்டுமே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.

JUSTIN: அப்பர் புக்கிட் திமா விளையாட்டு மைதானத்தில் 2 குழந்தைகளின் உடல்கள் கண்டெடுப்பு