சிங்கப்பூரில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியின் ஒழுங்குமுறை ஆசிரியர் ஒருவர்,பள்ளியில் பணிபுரியும் பெண் ஆசிரியைகள்,கற்கும் மாணவிகளை தவறாக வீடியோக்களை எடுத்ததற்காக ஆகஸ்ட் 2 அன்று குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
தண்டனையின் போது மேலும் ஐந்து குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.அவருடன் பணிபுரியும் சக ஊழியர்களின் 156 வீடியோக்கள், மாணவர்களின் 12 வீடியோக்கள் என பதிவு செய்துள்ளார்.
சுமார் மூன்று வருடமாக இந்த இழிவுச் செயலில் ஈடுபட்டுள்ளார்.இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் ஏப்ரல் 2015 மற்றும் ஜூலை 2018 க்கு இடையில் வீடியோக்களை படம்பிடித்துள்ளார்.
டேட்டா என்ட்ரிக்காக தனது சக ஊழியர்களை அழைத்து அவர்கள் தனது மேசையில் நிற்கும் போது, அந்த நபர் தனது கைபேசியை அவர்களின் பாவாடையின் கீழ் வைத்து வீடியோ பதிவு செய்தது தெரியவந்துள்ளது.
பின்னர் அவரது ஒழுங்குமுறை அறைக்குள் கணினியைப் பயன்படுத்த மாணவிகளை அழைத்ததும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொபைல் போனில் பதிவு செய்த வீடியோக்களை வெளிப்புற ஹார்டு டிஸ்கிற்கு மாற்றுவார்.ஆனால் அவற்றை பகிரவோ வெளியிடவோ செய்யாமல் அவரது சொந்த உபயோகத்திற்காக வைத்துள்ளார்.
குற்றங்களின் போது அந்த நபர் ஒரு பெரிய மனச்சோர்வுக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவர் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.குற்றத்தை குற்றவாளி ஒப்புக்கொண்டதால் நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்டது.நவம்பரில் தண்டனைக்காக நீதிமன்றத்திற்கு திரும்புவார்.