வெளிநாட்டு ஊழியர் தனது “தடுப்பூசி நிலையை” மற்றொரு ஊழியர் பயன்படுத்த அனுமதித்ததாக குற்றச்சாட்டு

indian-origin-singapore-jailed

TraceTogether செயலியில் மற்றொரு ஊழியர், தனது தடுப்பூசி நிலையைப் பயன்படுத்த அனுமதித்ததாக வெளிநாட்டவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த கிரண் சிங் ரக்பீர் சிங், 37, என்ற வெளிநாட்டவர் மீது இன்று புதன்கிழமை (டிசம்பர் 29) இந்த ஏமாற்று வேலைக்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

சிலோசோ பீச்சில் நீரில் மூழ்கியதாக கூறப்படும் சிறுமி… என்ன நடந்தது? (வீடியோ இணைப்பு)

குற்றப்பத்திரிகைகளின்படி; அந்த செயலியின் மூலம் தனது முழு தடுப்பூசி நிலையைப் பயன்படுத்தி அவர் உதயகுமார் நல்லதம்பி என்ற நபரை சைலோசோ கடற்கரையில் உள்ள கோஸ்ட்ஸ் பார் உள்ளே நுழைய அனுமதித்துள்ளார்.

65 வயதான உதயகுமாரை, கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி மாலை 6 மணியளவில் மதுக்கடைக்குள் நுழைய அவர் அனுமதித்தார்.

சிங்கின் இந்த செயல் “உதயகுமாரின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்” என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உதயகுமார் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது.

குடியிருப்பில் பல நாட்களாக வீசிய துர்நாற்றம்: அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு