சிலேத்தர் விரைவுச்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 9) நடந்த விபத்தில் வேன் ஒன்று தீப்பிடித்து எரிந்து கவிழ்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
இதில் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியுள்ளது.
சுற்றுலா பேருந்து கோர விபத்து: இருவர் மரணம் – மூன்று பேர் படுகாயம்.. 15 பேர் மருத்துவமனையில்
சாலை எங்கும் காரின் பாகங்கள் சிதறி கிடப்பதையும் வீடியோவில் காண முடிந்தது.
நேற்று ஜூலை 9 ஆம் தேதி இரவு சுமார் 9.40 மணியளவில் சாலை விபத்து பற்றிய புகார் கிடைத்ததாக SCDF தெரிவித்தது.
அதைத் தொடர்ந்து, ஒருவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் உள்ள நபரின் தற்போதைய நிலை குறித்து தெரியவில்லை.
இந்த விபத்தில் வேறு யாராவது பாதிக்கப்பட்டார்களா என்பதும் தெரியவில்லை.
விசாரணைகள் நடந்து வருகின்றன.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்
நிறுவனத்தின் அலட்சியம்… பறிபோன அப்பாவி ஊழியரின் உயிர் – MOM கடும் நடவடிக்கை