காவல்துறையால் தேடப்பட்டு வந்த இந்திய ஊழியர் சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தபோது காவல்துறையிடம் சிக்கினார்.
கேரள மாநிலம் கண்ணணூர் பகுதி காவல்துறை அதிகாரிகள் “லுக் அவுட்” அறிவிப்பு மூலம் ஹீதாஸ் (27) என்ற ஊழியரை தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த பிப். 18 ஆம் தேதி காலை ஏர் இந்தியா விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஹீதாஸ் அதிகாரிகளிடம் சிக்கினார்.
இதனை அடுத்து, திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் அவர் கண்ணனூர் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதனால், திருச்சி விமான நிலைய வளாகத்தில் பயணிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.