தன் மனைவி மீது சந்தேகம் கொண்டு பிறப்புறுப்பில் கத்தி கொண்டு தாக்கிய ஆடவருக்கு 5 ஆண்டு சிறை!

Photo: Getty

சிங்கப்பூரில், 31 வயதான தனது மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாக நம்பிய 65 வயது மனநலம் குன்றிய ஆடவர் ஒருவர், நான்கு பெரிய கத்திகளால் மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் ​​காதலனுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக ஃபாங் டக் வை என்ற அந்த ஆடவர்,  61 வயதான திருமதி. லீ சியூ செங் பிறப்புறுப்பில் தாக்கியுள்ளார்.

சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் ஊழியர்…தமிழ்நாட்டில் சொந்த வீட்டை கட்டி வரும் வேளையில் பல லட்சம் மதிப்புள்ள நகை பணம் திருட்டு! – உடைந்து போன ஊழியர்

திருமதி. லீ தன்னைத் தற்காத்துக் கொள்ள முயன்றபோது, ​​ஃபாங் அவரின் கண்களில் பூச்சி மருந்தை தெளித்தார் என்றும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து, சக்கர நாற்காலியை பயன்படுத்தி வரும் திருமதி லீ, உதவி வேண்டி சத்தமிட்டு மற்றவர்களை அழைத்து உயிர் தப்பினார்.

இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை (மே 6), உயர் நீதிமன்றம் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இப்போது 67 வயதாகும் ஃபோங், 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 அன்று இந்த கொலை முயற்சி தாக்குதலின் ஈடுபட்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு தற்போது தண்டனை வழங்கப்பட்டது.

அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு மனநல கண்காணிப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

“யாருங்க இவரு.. பரபரப்பான ரோட்டுல இப்படி பன்றாரு” கடுப்பான நெட்டிசன்கள்! (வீடியோ)