காயங்களுடன் சாலையில் கிடந்த பெண்… நாசம் செய்தவர்களை CCTV மூலம் அடையாளம் கண்ட போலீஸ் – 12 மணி நேரத்திற்குள் கைது

508 nabbed illegal moneylending and scams
Photo: Getty

பெண்ணை சீரழித்தது தொடர்பான வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் மீது இன்று வியாழன் (மார்ச் 10) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை 7.25 மணியளவில் 32 வயதுடைய பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் சுயநினைவுடன் பயனியர் சாலையில் காணப்பட்டதை அடுத்து, உதவி வேண்டி அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில் இனி இதெல்லாம் “கட்டாயம்” – அதிரடி அறிவிப்பு

சம்பவ இடத்தில், ​​அந்த பெண்ணுக்கு தலை மற்றும் உடலில் காயங்கள் பல இருந்ததாக போலீசார் கூறினர். பின்னர் சுயநினைவுடன் இருந்த அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், காயங்கள் அடைப்படையில் அவர் பாலியல் ரீதியான வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கலாம் என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

அதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தீவீர விசாரணைகள் மூலமாகவும், போலீஸ் கேமராக்கள் உதவியுடனும், புகார் பதிவு செய்யப்பட்ட 12 மணி நேரத்திற்குள் அந்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அவர்கள் 30 மற்றும் 36 வயதுடையவர்கள், போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

இந்தியர்களுக்கு தனிமை இல்லா தாராள அனுமதி கொடுத்த சிங்கப்பூர்: தமிழகத்தில் கூடுதல் விமான நிலையங்கள் சேர்ப்பு!