போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டதாக 24 வயது சிங்கப்பூர் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) மற்றும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவும் (CNB) கூட்டாக இன்று திங்கள்கிழமை (ஜனவரி 24) தெரிவித்தன.
மாண்டாய் அவென்யூவில் கொழுந்து விட்டெரிந்த பைக்… தீக்கிரையாய் போன வாகனம் – மருத்துவமனையில் ஓட்டுநர்
அந்த பெண் கடத்த இருந்த சுமார் 7 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா வகை பொருட்களை அதிகாரிகள் முறியடித்தனர்.
கடந்த ஜனவரி 20 அன்று, பார்சல் போஸ்ட் பிரிவில் உள்ள ICA அதிகாரிகள் அந்த பொட்டலத்தை ஸ்கேன் செய்யும் போது அவை கண்டுபிடிக்கப்பட்டன.
அது அழகு சாதனப் பொருட்கள் என பார்சல் செய்யப்பட்டதாக ICA மற்றும் CNB தெரிவித்தன.
அதே நாளில் CNB மேற்கொண்ட தொடர் நடவடிக்கையில், அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் நடவடிக்கைகள் தொடர்பில் அந்த பெண்ணிடம் விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன் சொந்த மகன்களையே கொலை செய்த தந்தை – ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சிங்கப்பூர் போலீஸ்