சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பிரேதம்.. போலீஸ் விசாரணை

woman-dead-ang-mo-kio
Shin Min Daily News

அங் மோ கியோவில் உள்ள எச்டிபி குடியிருப்பில் சிதைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் கடந்த ஏப். 29 அன்று கண்டெடுக்கப்பட்டது.

68 வயதான அவர் தனியாக வசித்து வந்த நிலையில், கடுமையாக துர்நாற்றத்தை அக்கம்பக்கத்தார் கவனித்ததை அடுத்து அவர் இறந்தது கண்டறியப்பட்டது.

“ஊழியர்களுக்கு ரோபோ ஒருபோதும் மாற்றாகாது” – சிங்கப்பூர் இணையத்தில் வைரலாகும் வீடியோ

கடந்த சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு பிளாக் 224 ஆங் மோ கியோ அவென்யூ 1ல் உள்ள வீட்டில் இயற்கைக்கு மாறான மரணம் குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர்க் காவல் படை உறுதி செய்தது.

சம்பவ இடத்தில் அசையாமல் கிடந்த பெண் இறந்தது தற்காப்புப் படையின் துணை மருத்துவரால் உறுதி செய்யப்பட்டது.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், சதிச்செயல் ஏதும் இந்த மரணத்தில் சந்தேகிக்கவில்லை என்பதையும் போலீசார் கூறியுள்ளனர்.

டேங்கர் கப்பலில் கடும் தீ விபத்து: 3 ஊழியர்களை காணவில்லை – தேடும் பணி தீவிரம்