அரசாங்க ஊழியரிடம் பொய்யான தகவலை வழங்கியதாக 34 வயதுடைய பெண் ஒருவர் போலீசாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மார்ச் 16 அன்று இரவு 10.25 மணியளவில் அந்தப் பெண்ணிடம் இருந்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
அப்போது பிளாக் 504 யுஷுன் ஸ்ட்ரீட் 51 க்கு அருகில் முன்பின் தெரியாத இரண்டு ஆண் நபர்களால் S$6,700 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டதாக அந்த பெண் கூறியதாகவும் போலீஸ் கூறியது.
மேலும், “ஆண்கள் ஆயுதம் வைத்து கொள்ளையடித்ததாகவும் அவர் தெரிவித்தாதாக போலீசார் கூறினர்.
“விசாரணைகள் மற்றும் போலீஸ் கேமரா உதவியுடன், உட்லண்ட்ஸ் போலீஸ் பிரிவின் அதிகாரிகள், போலீசாரிடம் அந்தப் பெண் தவறான தகவலை அளித்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தினர்.”
இந்நிலையில், அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.