பேருந்து ஓட்டுனரை முகத்தில் அடித்ததற்காக பெண்ணுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சரியான பேருந்து நிறுத்தத்தில் இறங்கத் தவறிய பெண் பேருந்து ஓட்டுனரை ஆவேசத்தில் தாக்கியுள்ளார்.
கடந்த அக்டோபர் 17ஆம் தேதி 38 வயது டான் சுன் ஃபேங்க் (Tan Chun Feng), பேருந்து எண் 143இல் பயணம் செய்தார்.அவள் இறங்க எண்ணிய நிறுத்தத்தை தவறவிட்ட பின்பு,பேருந்து ஓட்டுனர் வேண்டுமென்றே பேருந்தை நிறுத்தவில்லை என்று எண்ணினாள்.
ஓட்டுனரின் செயலால் கோவமடைந்த பெண்,அவர் தன்னைத் துன்புறுத்தியதாகக் கூறி ஓட்டுனரை சரமாரியாக தகாத வார்த்தைகளால் திட்டினார்.மேலும்,அதை வீடியோவாகப் பதிவு செய்தார்.பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுனர் தொடர்ந்து ஓட்டிக்கொண்டிருந்த போது டான் ஓட்டுனர் அணிந்திருந்த முகக்கவசத்தை பிடுங்கினாள்.
ஆவேசத்தில் எதிர்வினையாற்றிய டானைத் தடுக்க ஓட்டுனர் முயற்சித்தார்.அப்போது டான் ஓட்டுனரின் இடது கையைப் பிடித்து இழுத்து அவரின் முகத்தில் அறைந்தாள்.அடித்ததில் அவரின் மூக்குக்கண்ணாடி கீழே விழுந்தது.
காவல்துறைக்கு அழைப்பு விடுத்த பின்பு காவல்துறையினர் வரும்வரை பேருந்தை நிறுத்திக் காத்திருந்தார்.அந்தப் பெண் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக அவள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டாள்.