இரவு உணவிற்கு திரும்பவில்லை என்று கூறிய மகள் இறந்த நிலையில் மீட்பு ! – கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் கைது

man-charged-beach-road-shop-murder-3; mothership.sg
சிங்கப்பூரில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 27 வயதுப் பெண்ணின் மரணத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 50 வயது சிங்கப்பூர் ஆடவர் மீது நவம்பர் 18ஆம் தேதி கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.
எதிர்வரும் நவம்பர் 25-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும்.குற்றம் சாட்டப்பட்டவரும் இறந்த பெண்ணும் வணிகப் பங்குதாரர்கள் என்று கூறப்படுகிறது.சம்பவம் நடந்த இடத்தில் ஹார்டுவேர் கடை அமைக்கும் பணியில் இருந்தனர்.
கடற்கரை சாலையில் உள்ள ஹார்டுவேர் கடையில் காணாமல் போன ஆங் இறந்து கிடந்தார்.நவம்பர் 9 ஆம் தேதி இரவு 7:22 மணியளவில், இரவு உணவிற்கு வீட்டிற்குத் திரும்பப் போவதில்லை என்று தன் தாயிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து அவளைத் தொடர்புகொள்ள முடியவில்லை.நவம்பர் 13 அன்று கடற்கரை சாலையில் உள்ள ஒரு கடையில் சடலமாக அவள் மீட்கப்பட்டாள்.சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்தக் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை சிங்கப்பூர் போலீஸ் படை (SPF) கண்டுபிடித்தது.
குற்றம்சாட்டப்பட்டவர் நவம்பர் 10, 2022 அன்று காலை அவர் மலேசியாவுக்குப் புறப்பட்டுச் சென்றதால், அவரைக் கண்டுபிடிக்க ராயல் மலேசியா காவல்துறையிடம் (RMP) SPF உதவி கோரியது.பின்னர் அவர் ஜோகூர் பாருவில் கைது செய்யப்பட்டு நவம்பர் 16-ஆம் தேதி சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்டார்.