தன்னை ஆணாக காட்டி கொண்டு வலைத்தளங்களில் ஆள்மாறாட்டம் செய்த பெண் ஒருவர் பிடிபட்டுள்ளார்.
இணையம் வழியாக தாம் ஒரு ஆடவர் என்று மற்றொரு பெண்ணிடம் நட்பு கொண்ட அந்த பெண், ஆசை வார்த்தைகளை கூறி அவரை தன் வசப்படுத்தினார்.
பின்னர் அவரது நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை வாங்கி வைத்துக்கொண்டு தன் வேலையை தொடங்கினார் பலே கில்லாடி பெண்.
லிட்டில் இந்தியா ரயில் நிலையத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபர் – மடக்கி பிடித்த போலீஸ்
அதனை அடுத்து, அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து அவரை மிரட்டி பணம் பறித்துள்ளார் அவர்.
இதில் பாதிக்கப்பட்ட அந்த பெண் S$4,000க்கும் அதிகமாக இழந்துள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில், 23 வயதான Janelle Phang Minxuan என்பவருக்கு திங்களன்று நான்கு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் ஏமாற்றுதல் மற்றும் கிரிமினல் மிரட்டல் ஆகிய தலா ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
சிங்கப்பூர் TOTO: $12 மில்லியன் ஜாக்பாட் பரிசுத் தொகை – அலைமோதிய கூட்டம்; இன்று முடிவு