துவாஸ் வழியாக செல்லும் மலேசிய சோதனைச் சாவடியில் பெண் ஒருவர் விசித்திரமாக நடந்துகொண்ட சம்பவம் வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
அதாவது, காரின் முன்பக்க எண் தகட்டை உடைத்து வாகனத்தின் கண்ணாடி மீது வீசி எறிந்த அந்த பெண்ணை ஜோகூர் போலீசார் தேடி வருகின்றனர்.
சிங்கப்பூரில் கடந்த மாதம் உயிரிழந்த தமிழர்… சடலத்தை பெற்றுக்கொள்ள முன்வருமாறு போலீஸ் வேண்டுகோள்
இந்த சம்பவம் துவாஸ் செகண்ட் லிங்க் இமிக்ரேஷன் அண்ட் க்வாரண்டைன் காம்ப்ளக்ஸ் (CIQ) அருகே நடந்தது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பான வீடியோ இரு தினங்களாக சமூக ஊடகங்களில் வழியே தீயாக பரவியது.
வைரலான அந்த வீடியோவில், கருப்பு நிற காருக்கு எதிரே நின்ற பெண் தடமாறிய வாகனத்தை செல்ல விடாமல் வழிமறித்து பிடிவாதம் செய்வதை காணலாம்.
அதோடு மட்டுமல்லாமல் காரின் மேல ஏற முயன்றும் பின்னர் எண் தகட்டை உடைந்து கார் முகப்பு கண்ணாடி மீது கோவமாக வீசுவதையும் வீடியோவில் காண முடிந்தது.
இந்த முறையற்ற செயல் தொடர்பாக ஜொகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.