சிங்கப்பூரில் பொது இடத்தில் முத்த மழை பொழியும் ஜோடிகள்! இருந்தும் இப்படி ஒரு சம்பவம் நடந்து கேள்விப்பட்டு இருக்கீங்களா? அதாம்லே சிங்கப்பூரு கெத்து!

ஆசியாவில் மட்டுமல்லாது உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நாடு சிங்கப்பூர் தான் என்று தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார் ராஜமருதவேல்.

நள்ளிரவில் ஒரு பெண் தனியாக செல்ல வேண்டும் என்றால் அது சிங்கப்பூரில் மட்டுமே சாத்தியம். வேறு எந்த நாடும் இந்த அளவிற்கு பாதுகாப்பானதாக தெரியவில்லை.

நம்மூரில் ஜன்னல் வைத்த ஜாக்கட் போட்டு பெண்கள் சென்றாலே ஆண்கள் கிண்டலடிப்பார்கள். பார்வையும் அங்கே தான் இருக்கும். சிங்கப்பூரில் மிகக் கவர்ச்சியாக பெண்கள் ஆடை அணிந்திருப்பார்கள். தமிழ் பெண்களும் சேர்த்து தான்.

ஆனால் , யாரும் கிண்டல் செய்வது கிடையாது.உற்று பார்க்கவும் மாட்டார்கள். நீங்கள் பார்த்தால் உங்கள் நண்பரே எச்சரிப்பார்.

சிங்கப்பூர் முழுக்க எக்ஸ்லேட்டரில் ஜோடிகள் ஏறும் போதே கட்டிப்பிடித்துக் கொண்டு லிப்லாக் செய்து தான் ஏறுவார்கள். மெட்ரோக்களில் ஜோடி ஜோடியாக கட்டிபிடித்துக் கொண்டு லிப்லாக் செய்து கண்ணை முடி நின்று கொண்டிருப்பார்கள். வேறு எவரும் அந்த பெண்களை சீண்டி விட முடியாது. அவ்வளவு கட்டுப்பாடு .

மெட்ரோக்களில் , மால்களில் கூட்டம் அலை மோதினாலும் பெண்களை இடிப்பதில்லை.

திருட்டு என்பதெல்லாம் கிடையாது. பகலிலும் இரவிலும் எங்கள் வீடு திறந்தே கிடக்கும். வீட்டு வாசலில் CCTV எல்லாம் கிடையாது. என்றாவது பூட்டினாலும் சாவி ஷூவில் தான் இருக்கும்.

எனக்கு தெரிந்து சிங்கப்பூரில் கொலை கொள்ளை , கற்பழிப்பு செய்திகளை படித்தது இல்லை. அரிதாக இருக்கலாம்.

குண்டுவெடிப்பு , போராட்டம் , மறியல் , ஊர்வலம் எதுவும் இல்லாத நாடு. துப்பாக்கி சூடும் நடப்பதில்லை என்று கூறியுள்ளார்.