work permit-ல் வேலைக்கு வந்த ஊழியர்: கடையில் சிறுமியிடம் சில்மிஷ வேலை – தட்டி தூக்கிய போலீஸ்

சிங்கப்பூர்: பொதுவெளியில் 11 வயது சிறுமி ஒருவரை மானபங்கம் செய்ததாக வெளிநாட்டு ஊழியர் ஒருவர் ஒப்புக்கொண்டார்.

18 வயதான அவர் விற்பனை உதவியாளராக பணியாற்றினார். சிங்கப்பூரில் தன் பணியைத் தொடங்கி ஒரு வாரத்திற்குள் சிறுமியை பொது இடத்தில் மானபங்கப்படுத்தியதை ஒப்புக்கொண்டார்.

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் இலவசமாக பயணிக்க தயாரா? – ஒரு நாள் (நவ.11) சலுகை

மலேசியாவைச் சேர்ந்த லீ ஜியான் பிங் என்ற அவர், இந்த ஆண்டு மே 20 அன்று பணி அனுமதியின்கீழ் (work permit) சிங்கப்பூருக்குள் நுழைந்தார்.

ஜூரோங் பாயின்ட் ஷாப்பிங் சென்டரில் பணிபுரிந்த அவர், சிறுமியின் பின்பகுதியை ஆடைகளுக்கு மேல் பலமுறை தொட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

14 வயதிற்குட்பட்ட இளம்வயதினரை மானபங்கம் செய்தால் ஐந்து ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது பிரம்படி அல்லது இந்தத் தண்டனைகளின் கலவையை எதிர்கொள்ள நேரிடலாம்.

தாயை கீழே தள்ளி உதைத்து, துடைப்ப கட்டையால் தாக்கிய மகன் – சிறை தண்டனை விதித்து கோர்ட் அதிரடி தீர்ப்பு