சிங்கப்பூரில் 59 வயதான ஊழியர் வேலையிடத்தில் ஏணியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக மனிதவள அமைச்சகம் (MOM) புதன்கிழமை (ஜன. 19) தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 24 அன்று 1024 Yishun Industrial Park Aஇல் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
கழுத்தில் கேபிளுடன் ஆபத்தான நிலையில் உடும்பு…”உதவுவது நம் பொறுப்பு” – சிங்கப்பூர் வைரல்
ஏணி நழுவி ஊழியர் கீழே விழுந்ததில் அவரின் தலை தரையில் மோதியதாக கூறப்பட்டுள்ளது. பின்னர் அவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மூன்று நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து விசாரித்து வருவதாக MOM தெரிவித்துள்ளது.
2021ல் மட்டும் பணியிட இறப்புகளின் மொத்த எண்ணிக்கை 37 ஆக உள்ளது என்று MOM தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் 3 நாட்களாக காணாமல் போன மலேசிய இளம்பெண்… ஆற்றில் சடலமாக மிதப்பு – என்ன நடந்தது?