சிங்கப்பூரில் இருந்து வந்த ஊழியரை ஆயுதம் கொண்டு கடுமையாக தாக்கிய இருவர்

சிங்கப்பூரில் இருந்து வந்த ஊழியரை ஆயுதம் கொண்டு கடுமையாக தாக்கிய இருவர்
DailyThanthi

சிங்கப்பூரில் இருந்து வந்த ஊழியரை ஆயுதம் கொண்டு தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூர் வேலைக்காக சென்றிருந்தவர் வெள்ளைச்சாமி (வயது 48). இவர் புதுக்கோட்டை மாவட்டம், கடியாபட்டி பகுதியை சேர்த்தவர்.

இங்கு 3 ஆண்டுகள் வேலை பார்த்த வெள்ளைச்சாமி சமீபத்தில் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு திரும்பினார்.

திருச்சி விமான நிலையம் வந்த அவரை அழைக்க அவரது மனைவி சுபஸ்ரீ (38) மற்றும் 5 வயது மகன் சஞ்சய் ஆகியோர் வாடகை காரில் சென்றிருந்தனர்.

ஏர்போர்ட்டில் அவரை அழைத்துக்கொண்டு அவர்கள் காரில் சொந்த ஊர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

பின்னர் கீரனுர் பகுதியில் அவர்கள் சாப்பிட்டு முடிந்து வாகனத்தில் ஏற தயாராக இருந்தபோது, அங்கு காரில் வந்த 4 பேரில் இருவர் பட்டாக்கத்தியால் வெள்ளைச்சாமியை சரமாரியாக வெட்டினர்.

இதில் அவரின் தலை மற்றும் வயிற்று பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. வெட்டிய கும்பல் காரில் தப்பிச்சென்றது.

இதனை அடுத்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இதில் சிவகங்கை மாவட்ட பகுதியை சேர்ந்த இரு கூலிப்படை இளைஞர்கள் பிடிபட்டனர். அவர்கள், அழகு பாண்டி (26), மதன்ராஜ் (20) என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் இந்த தாக்குதல், ஏவி விட்டவர் யார் ? என்ற கோணத்தில் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.