தன்னுடைய வேலையை விட்டுவிட்டு 20 ஆண்டுகளுக்கும் மேல் கடந்து சென்ற நிலையில், ஊழியர் ஒருவர் முதலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதலாளி தனக்கு S$500 சம்பளம் கொடுக்க தவறியதாக எண்ணிய ஊழியர், தொலைபேசி மூலம் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
சீட் என்ஜியன் எங், 62, என்ற அந்த ஊழியர் இந்த குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவருக்கு நேற்று புதன்கிழமை (ஏப்ரல் 13) S$2,500 அபராதம் விதிக்கப்பட்டது.
அவர், 60 வயதான திரு நியோ ஹாங் சையிடம் பணிபுரிந்தார் என்று கூறிய நீதிமன்ற ஆவணங்கள், அவரது முன்னாள் வேலை பற்றிய விவரங்களை வெளியிடவில்லை.
“குற்றம் சாட்டப்பட்ட ஊழியர், முதலாளிக்கு கால் செய்து ‘உன் மொத்த குடும்பமும் உயிரிழக்க நேரிடும்’ என்று மிரட்டியதாக அதில் கூறப்பட்டுள்ளது.