“ஊழியர்கள் படிப்படியாக வேலையில் இருந்து நீக்கம் செய்யப்படுவர்” – Turf club

காணாமல் போன ஆடவர்

சிங்கப்பூர் Turf Club ஊழியர்கள் 350 பேர் படிப்படியாக வேலையில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என சொல்லப்பட்டுள்ளது.

மறுசீரமைப்பு பணிக்காக Turf Club அமைவு இடம் அரசாங்கத்திடம் ஒப்படைக்க பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது வரும் 2027 ஆம் ஆண்டுக்குள் அந்த இடம் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என்பது கூடுதல் தகவல்.

இதன் காரணமாக அதன் ஊழியர்கள் படிப்படியாக நீக்கப்படுவர் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலையில் இருந்து நீக்கப்படும் ஊழியர்கள் வேறு வேலை தேடிக்கொள்ள போதிய அவகாசம் வழங்கப்படும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஐரின் லிம் உறுதிப்பட கூறியுள்ளார்.

அடுத்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 5 அன்று இறுதியாக குதிரைப் பந்தயம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு சுமார் 700 குதிரைகள் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்