துவாஸ் அருகே ஏற்பட்ட விபத்தில் இரு வெளிநாட்டு ஊழியர்கள் மரணம்

Singapore Road Accident/Facebook

துவாஸ் அருகே ஏற்பட்ட விபத்தில் இரு வெளிநாட்டு ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

லாரியின் பிரேக் செயலிழந்து, டிரெய்லர் வாகனம், பேருந்து மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி கடும் விபத்து ஏற்பட்டது.

சிங்கப்பூர் TOTO டிராவில் முதல் பரிசை யாரும் வெற்றி பெறாததால் “12 பேருக்கு அடித்த செம்ம அதிஷ்டம்”

இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டிகளும் லாரியில் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது, அதில் ஒருவர் லாரி அடியில் சிக்கிக்கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த 49 மற்றும் 54 வயதுடைய இரு ஊழியர்களுக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அனைத்து வாகனமும் சிங்கப்பூர் நோக்கி வந்ததாக கூறப்படுகிறது.

இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் சிங்கப்பூரில் வேலை செய்து வந்த மலேசியர்கள்.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் முதலாளிகளுக்கு எச்சரிக்கை