உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நாடு இதுதான்… சமீபத்திய ஆய்வு வெளியிட்டுள்ள முடிவு!

உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நாடாக சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சிங்கப்பூர் பாதுகாப்பாக இருக்க உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் தொடர்ந்து அயராது பாடுபடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே, சிங்கப்பூரில் அதிகாரிகளின் நடவடிக்கையால், முன்னாள் குற்றவாளிகள் மீண்டும் குற்றங்களுக்குத் திரும்புவது குறைந்துள்ளது. அத்துடன் சிங்கப்பூர் சிறைச்சேவையும் மஞ்சள் நாடா திட்டமும் ஒன்றிணைந்து நாட்டின் குடிமக்கள், குடும்பங்கள், முதலாளிகள், அரசாங்க அமைப்புகள் போன்றோரிடமிருந்து பேராதரவைப் பெற்றுள்ளது.

எனவே, சிங்கப்பூரில் அதிகாரிகளின் நடவடிக்கையால், முன்னாள் குற்றவாளிகள் மீண்டும் குற்றங்களுக்குத் திரும்புவது குறைந்துள்ளது. அத்துடன் சிங்கப்பூர் சிறைச்சேவையும் மஞ்சள் நாடா திட்டமும் ஒன்றிணைந்து நாட்டின் குடிமக்கள், குடும்பங்கள், முதலாளிகள், அரசாங்க அமைப்புகள் போன்றோரிடமிருந்து பேராதரவைப் பெற்றுள்ளது.

அதுமட்டுமில்லாமல், சிங்கப்பூரில் சைக்கிளோட்டிகள் சாலை விபத்துக்குள்ளாவது குறைந்துள்ளதாகப் போக்குவரத்துக் காவல்துறையும், நாட்டில் தீச்சம்பவங்கள் குறைந்துவிட்டதாகக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்துள்ளன.