யுஷுனில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ.. 50 பேர் வெளியேற்றம்

yishun-hdb-catch-
SCDF

யுஷுனில் உள்ள HDB பிளாக்கில் நேற்று மார்ச் 22 நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது.

நள்ளிரவு 2:25 மணியளவில் பிளாக் 672C Yishun Ave 4 இல் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) உறுதிப்படுத்தியது.

13 வது மாடியில் உள்ள வீட்டின் படுக்கையறையில் தீ ஏற்பட்டதாக SCDF கூறியுள்ளது.

பின்னர் தீயணைப்பு கருவி பயன்படுத்தி தீ அணைக்கப்பட்டது, மேலும் சுமார் 50 குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்ட பிளாக்கில் இருந்து காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர்.

மூன்று பேருக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டது, அதனால் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.