Yishun பகுதியில் மின் தடை ; SP குழு கூறுவது என்ன?

Yishun பகுதியில் சில இடங்களில் 3 வது கான்ட்ராக்டர் கேபிளை சேதப்படுத்தியதன் காரணமாக மின் தடை ஏற்பட்டது.

ஜூன் 21 மாலை 4.30 மணியளவில் yishun பகுதியில் மின் தடை ஏற்பட்டது. தகவல் அறிந்து அப்பகுதிக்கு உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சென்று மின் இணைப்புகளை சரி செய்தனர். மின் தடை ஏற்பட்டதில் இருந்து 20 நிமிடங்களில் மின் சேவை பழைய நிலைக்கு திரும்பியது.

சில வாடிக்கையாளர்களுக்கு இந்த மின் தடை தொடரும் என்று SP கூறியது. மேலும், இதற்காக தகுதி பெற்ற மின் ஊழியர்களை பணியில் ஈடுபடுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.