யுஷுன் ரிங் சாலையில் நேற்று செவ்வாய்கிழமை (ஜூன் 20) காலை நடந்த விபத்தில் 75 வயது மூதாட்டி உயிரிழந்தார்.
இதனை அடுத்து, விபத்தில் தொடர்புடைய 52 வயதான மினி பஸ் ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
சிங்கப்பூரில் “buck moon” என்னும் சூப்பர் மூனை காண அரிய வாய்ப்பு – எங்கே, எப்போது காணலாம்?
மூதாட்டி சாலையில் கிடக்கும் புகைப்படத்தை ஷின் மின் டெய்லி நியூஸ் பகிர்ந்துள்ளது.
அதில் துணை மருத்துவர்களில் ஒருவர் மூதாட்டிக்கு CPR சிகிச்சை செய்வதையும் காண முடிகிறது.
இதுகுறித்து காலை 8:05 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) தகவல் கொடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் மயக்க நிலையில் இருந்த அந்த மூதாட்டி, கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், நேற்று மாலை 6 மணியளவில் அந்தப் பெண் மருத்துவமனையில் இறந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக மினி பஸ் ஓட்டுனரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்
கட்டுமான ஊழியர் விளையாட்டாக செய்த செயல்… அவருக்கே வினையாய் அமைந்தது – S$3,500 அபராதம்