ஜப்பான் மன்னராக நருஹிடோ முடிசூடிக் கொண்டதை உலக நாடுகளுக்கு முறைப்படி அறிவிக்கும் நிகழ்ச்சி அந்த நாட்டின் தலைநகா் டோக்கியோவில் நடைபெற்றது.
ஜப்பான் மன்னராக இருந்த அகிஹிடோ முடிதுறந்ததைத் தொடா்ந்து, அவரது மகன் நருஹிடோ அடுத்த மன்னராக கடந்த மே மாதம் முடிசூடிக் கொண்டாா். இந்த நிலையில், அவா் புதிய மன்னராக முடிசூடிக் கொண்டதை உலக நாடுகளின் தலைவா்களுக்கு முறைப்படி அறிவிக்கும் நிகழ்ச்சி, டோக்கியோவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.
Japanese emperor formally proclaims enthronement
WATCH: Japan Emperor Naruhito formally proclaims his ascension to the throne in a centuries-old ceremony.(Video: Reuters)
Posted by CNA on Tuesday, October 22, 2019
அண்மையில் ஜப்பானை புரட்டிப் போட்ட ஹகிபிஸ் சூறாவளி கோரத்தாண்டவத்தில் 80 பேர் உயிரிழந்தனர். அதன் காரணமாக பேரரசர் அரியணை ஏறிய பின்பு நடைபெறும் கொண்டாட்ட அணிவகுப்பு நிகழ்ச்சிகள் அடுத்த மாதம் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் 180 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2000 முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.