சமூக வலைதள கணக்குகள் ஆதாருடன் இணைக்கப்படுமா?

Social Media Accounts To Be Linked with Aadhar Id?

சமூக வலைதள கணக்குகளை ஆதாருடன் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுமா என்ற கேள்வி அனைவரின் உள்ளத்திலும் இருந்த ஒன்றுதான். அதற்கு இந்த இணைப்பு திட்டம் இல்லை, என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், தனி நபர் குறித்த விவரங்கள் மற்றவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை என்ற கொள்கையின் அடிப்படையில் மட்டுமே ஆதார் எண் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், தனி நபர்களின் சமூக வலைதள கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை எனவும் கூறினார்.

வெளிநாடு வாழ் இந்தியர்களும் ஆதார் எண்ணை பெற உரிமை உண்டு எனவும் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

ஆதாரை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட நபரால் பதிவு செய்த தகவல்கள் மட்டுமே உள்ளதாகவும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.