சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ, அது அப்படியே நேற்று(மே.10) நடந்து முடிந்திருக்கிறது. ஆம், டெல்லி கேபிடல்ஸை வீழ்த்தி இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.
விசாகப்பட்டினத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, பவுலிங் தேர்வு செய்ய, தவான் ப்ரித்வி ஷா தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
டெல்லி அணியின் பெரும்பாலான வெற்றிகளில் மிக முக்கிய பங்கு வகித்த ஷிகர் தவான் 18 ரன்களில் வெளியேற, ப்ரித்வி 5 ரன்களில் அடங்கிப் போனார். தொடர்ந்து காலின் மன்ரோ 27, கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 13 என்று அவுட்டாக, டெல்லி தடம் மாறிப் போனது.
ரிஷப் பண்ட் மட்டும் சற்று தாக்குப்பிடித்து 38 ரன்கள் கொண்டுவர, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டும் எடுத்தது டெல்லி.
IPL 2019, CSK vs DC
That stand that helped balance the chase for the #yellove win! #WhistlePodu #CSKvDC ?? pic.twitter.com/GKFAgQouan
— Chennai Super Kings (@ChennaiIPL) 10 May 2019
தொடர்ந்து களமிறங்கிய சிஎஸ்கே தொடக்க வீரர்கள் ஷேன் வாட்சன், டு பிளசிஸ் மிக நிதானமாக இன்னிங்சை தொடங்கினர். பிறகு, டு பிளசிஸ் கியரை மாற்ற ரன் ரேட் உயரத் தொடங்கியது. டெல்லி பவுலர்களுக்கு சாத்துமுறை காட்டிய டு பிளசிஸ் 39 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
The moment that sealed us the win last night! Champion – Bahubali #Yellove moment in the middle! #WhistlePodu ?? pic.twitter.com/lCGphhacx7
— Chennai Super Kings (@ChennaiIPL) 11 May 2019
அதன்பிறகு, வாட்சன் இன்சார்ஜ் எடுத்து 32 பந்துகளில் 50 அடித்து சென்னைக்கு வலிமையான தொடக்கம் அமைத்துக் கொடுத்தார். தொடர்ந்து ரெய்னா 11, தோனி 9 ரன்கள் என அவுட்டானாலும் 19 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இதன் மூலம், நாளை(மே.12) ஹைதராபாத்தில் நடக்கவுள்ள பைனலில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து சிஎஸ்கே ஆடுகிறது. இந்த சீசனில் ஏற்கனவே மும்பையுடன் மோதிய மூன்று போட்டிகளிலும் சென்னை தோற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க – கூக்குபுரா பந்து vs டியூக் பந்து