தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக இந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசனின் மகள் ரூபா குருநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்துகொள்ளலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் மற்றும் பிசிசிஐ வகுத்த விதிமுறைகளின் கீழ் இத்தேர்தல் நடத்தப்பட வேண்டுமென உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.
பிசிசிஐ-யின் தலைவராக இருந்த என். சீனிவாசனின் மகள் ரூபா பிசிசிஐ சங்கத்தின் புதிய தலைவரா, ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் சூதாட்ட புகாரில் கைதாகி பின்னர் வெளியே வந்த குருநாத் மெய்யப்பனின் மனைவி ரூபா என்பது குறிப்பிடத்தக்கது. திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு அறங்காவலர் குழு உறுப்பினராக இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன துணைத் தலைவரும், மேலாண் இயக்குநருமான என். சீனிவாசன் 3வது முறை நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.