உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல்; முதலிடம் பிடித்து இந்திய அணி சாதனை!

Shooting World Cup: India finish with five gold medals in Rio

பிரேசில் நாட்டின் ரியோ டிஜெனிரியோ நகரில் நடைபெற்ற இத்தொடரின் இறுதி நாளான நேற்று 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் மனு பாக்கர், சவுரப் சவுத்ரியும், யஷ்யஷ்வினி தேஷ்வல், அபிஷேக் வர்மா ஆகியோர் மோதினர்.

இதில் தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்திய மனு பாக்கர், சவுரப் சவுத்ரி ஜோடி தங்கப் பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்தனர். அடுத்த இடம் பிடித்த யஷ்யஷ்வினி தேஷ்வல், அபிஷேக் வர்மா ஆகியோர் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் இத்தொடரில் மட்டும் பதக்கப் பட்டியலில் 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.

ஒட்டுமொத்தமாக 2019ம் ஆண்டு உலகக்கோப்பை துப்பாக்கிச்சூடு தொடரில் மொத்தம் 16 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என பதக்கப் பட்டியலில் இந்திய அணி முதலிடம் பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.