சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட தமிழ் திரைப்படத்தின் தலைப்பு..!

Rio and Ramya’s next takes a cue from Vadivelu’s lines

இயக்குனர் பத்ரி வெங்கடேஷின் அடுத்த ரியோ ராஜ் மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோரின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

பத்ரி வெங்கடேஷ் ‘பானா காத்தாடி’, ‘செம போத ஆகாத’ படங்களை இயக்கியவர். மீண்டும் யுவன் தான் இவர் படத்திற்கு இசை அமைக்கிறார்.

இந்த குழு ஏற்கனவே தயாரிப்புக்கு பிந்தைய பணிகளை ஆரம்பித்துள்ள நிலையில், இந்த படத்திற்கு “பிளான் பண்ணி பண்ணனும்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

வைகை புயல் வடிவேலுவின் புகழ்பெற்ற இந்த தலைப்பு ஸ்கிரிப்ட்டுக்கு மிகவும் பொருத்தமானது என்று பத்ரி கூறியுள்ளார்.

மேலும், “படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு திட்டம் உள்ளது. அதில் திட்டம் இல்லாமல் அவர்கள் ஒருவருக்கொருவர் உரையாடிக் கூட இருக்க மாட்டார்கள். அதனால்தான் இந்த வசனம் எங்கள் திரைப்படத்தின் தலைப்பாக இருந்தால் நல்ல இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம்” என்றார்.

இந்த படத்தின் தலைப்பை இந்த குழு சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு பயணம் சார்ந்த படம் என்பதைக் கருத்தில் கொண்டு, திட்டமிடல் என்பது தனக்கு குறிப்பாகத் தெரிந்த ஒன்று என்று பத்ரி கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் ‘ஸாக் சலாம்’ இந்திய கண்காட்சியில் இந்த திரைப்படத்தின் தலைப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.