சாய் வான் ஹோ பகுதி போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலில் ஒருவர் சுட்டு கொல்லப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
21 வயதான எதிர்ப்பாளர் திங்கள்கிழமை இன்று அதிகாலை ஒரு போலீஸ் அதிகாரியால் நேரடியாக சுடப்பட்டார், இதனை தொடர்ந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு, நகரம் முழுவதும் மோதல்கள் வெடித்துள்ளன. இந்த நேரடியாக சுடும் காணொளி முகநூல் நேரலையின் மூலம் ஒளிபரப்பாகியிருக்கிறது.
இந்நிலையில்,சுடப்பட்டவரின் நிலை குறித்து தகவல் ஏதும் வெளிவரவில்லை.
அலெஸ் சோவ் (22 வயது) என்ற ஆர்ப்பாட்டக்காரர் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன