உடும்பை பாலியல் நாசம் செய்த நான்கு பேர்… CCTV கேமராவில் பகீர் – கைது செய்த இந்திய போலீஸ்

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புலிகள் சரணாலயத்தில் வங்காள உடும்பை பாலியல் பலாத்காரம் செய்ததாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

உடும்பை பாலியல் பலாத்காரம் செய்த பதிவு, அவர்களில் ஒருவரின் கைபேசியில் இருப்பதை வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் போது கண்டறிந்தனர்.

தமிழ்நாட்டின் வங்கியில் இருந்து சிங்கப்பூரில் உள்ள வங்கிகளுக்கு பணம் அனுப்ப முடியுமா?

சஹிதாரி புலிகள் சரணாலயத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள CCTV கேமரா உதவியுடன் அந்த நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்களை வனத்துறை அதிகாரிகள் தடுப்பு காவலில் வைத்ததாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், வேட்டையாட பயன்படுத்தப்படும் துப்பாக்கி, ஒரு பேட்டரி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், கடந்த ஏப்., 8ல் அவர்களுக்கு உள்ளூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு “அதிகபட்ச தண்டனையை” வழங்குமாறு நாங்கள் கோருகிறோம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளிநாட்டு ஊழியர்களே சிங்கப்பூர் கிளம்ப ரெடியா இருங்க… கட்டுமானத் துறையில் எகிறும் தேவை – பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி!