கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியை பிடிக்க இருக்கிறார் .
கனடா நாட்டின் பிரதமராக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோவின் பதவிக்காலம் நிறைவுபெறுவதையொட்டி அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. லிபரல் கட்சி சார்பில் ஜஸ்டின் மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் ஆண்ட்ரூ ஷீர் போட்டியிட்டார்.
Thank you, Canada, for putting your trust in our team and for having faith in us to move this country in the right direction. Regardless of how you cast your vote, our team will work hard for all Canadians.
— Justin Trudeau (@JustinTrudeau) October 22, 2019
மொத்தம் உள்ள 304 நாடாளுமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் சமீபத்தில் வெளியான தேர்தல் முடிவுகள் நிலவரத்தில் 154 தொகுதிகளில் லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களில் வென்றுள்ளது. இதன் மூலம் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதியாகியுள்ளது.
இருப்பினும் பெரும்பான்மைக்கு 170 இடங்கள் தேவை என்ற நிலையில் அந்த எண்ணிக்கையை பெற சிறிய கட்சிகளின் உதவியை ஜஸ்டின் நாட வேண்டி உள்ளது.
இதனிடையே தங்கள் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் வெற்றி தேடி தந்ததற்காக கனடா மக்களுக்கு தனது நன்றியை ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார் ஜஸ்டின் ட்ரூடோ.