11 வயது சிறுமி உட்பட இரண்டு பேரிடம் தவறாக நடந்துகொண்டதாக முதியவருக்கு 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கருத்துப்படி, 86 வயதான போ செங் கியான், பாலியல் சீண்டல் தொடர்பான இரு குற்றங்களை நேற்று (ஜூலை 28) ஒப்புக்கொண்டார்.
மூன்று வாகனம் சம்மந்தப்பட்ட விபத்தில் ஆடவர் ஒருவர் உயிரிழப்பு
நீதிமன்ற ஆவணங்களின்படி, போ அந்த குற்றத்தை செய்தபோது மற்றொரு பெண்ணுக்கு 27 வயது இருந்தது குறிப்பிடத்தக்கது.
பேருந்தில் தவறான முறையில் நடந்துகொண்டதை அடுத்து, அந்த பெண் தனது கணவருக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் கொடுத்தார்.
பின்னர், ஜூராங் அக்கம்பக்கம் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்தார். சி.சி.டி.வி காட்சிகள் மூலம் போவின் தவறான நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வந்தது.
அதே போல, 11 வயது மாணவி ஒருவரும் இதில் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த சிறுமியிடமும் பேருந்தில் தவறான முறையில் நடந்துகொண்டுள்ளார். வீட்டிற்கு வந்ததும், சிறுமி தனது பெற்றோருக்கு இந்த சம்பவம் குறித்து தெரிவித்தார்.
இதனையடுத்து காவல்துறையிடம் புகார் பதிவு செய்யப்பட்டது. போவின் செயல்கள் பேருந்தில் இருந்த கேமராவில் பதிவானது.
2020ஆம் ஆண்டில், 47 வயதான பெண்ணை பாலியல் சீண்டல் செய்த போவுக்கு 18 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செல்லுபடியாகும் “Work pass” இல்லாமல் 8 ஆண்டுகள் வேலை – நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு