சிங்கப்பூரின் டான்ஜோங் பகரில் (Tanjong Pagar) உள்ள தேசிய மேம்பாட்டு அமைச்சக கட்டிடத்தின் மேற்பரப்பில் நேற்று (ஜூலை 28) நள்ளிரவு 11:50 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து குறித்து நேற்று நள்ளிரவில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்துள்ளது.
பேருந்தில் சிறுமி உட்பட 2 பெண்களிடம் தவறாக நடந்துகொண்ட முதியவருக்குச் சிறை
தேசிய மேம்பாட்டு அமைச்சக கட்டிடத்தின் மேற்பரப்பில் ஏற்பட்ட தீயை நீர் ஜெட் மூலம் அனணக்கப்பட்டதாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை இன்று தெரிவித்துள்ளது.
கட்டிடத்தின் 23வது மாடியில் உள்ள திறந்த வெளியில் இந்த தீ சம்பவம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்றும், இந்த தீ சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் SCDF கூறியுள்ளது.
சிங்கப்பூரில் மேலும் புதிதாக 5 கிருமித்தொற்று குழுமங்கள் அடையாளம்